நடைப்பிணமாக
நகரும் நாட்கள்...
☘️
நான் மழை வெள்ளத்தில்
மூழ்கிய நெற்கதிரை போல
சாய்ந்து கிடக்கின்றேன்
எனக்குள் நிமிர்ந்தும் எழ
மறுக்கும் உணர்வுகள்
☘️
என் கல்லறையில் விழுந்த
கடைசி பூக்களைப் போல
சிதறி கிடக்கிறேன்
யாரிடமும் பேசாமல்
காய்ந்து போன வார்த்தைகள்
☘️
பொட்டிக் கடையில் தொங்கும்
தலைப்பு செய்தியை போல
அதிகம் விவாதிக்கப்படுகிறன்
என் விரல் விரதமிருக்க
தினமும் ஏமாறும் காகிதங்கள்
கடலூர் ராஜ்குமார்