Showing posts with label நடைப்பயிற்சி கவிதைகள். Show all posts
Showing posts with label நடைப்பயிற்சி கவிதைகள். Show all posts

Saturday, 21 August 2021

நடைப்பயிற்சி ஹைக்கூ

நடைப்பயிற்சி

நேத்து சாயங்காலம்
சாப்பிட்ட பானிப்பூரியால் 
விடியற்காலையில்
பாதயாத்திரை (பரிகாரம்) நடக்கும்

நெடுந்தூரம் நடந்தாலும் 
வேர்வை வர திணறுகிறது 
அவள் புன்னகையும் வெட்கமும் 
அப்படித்தான் எப்போதும் திணறும்

பக்கத்துவீட்டு அக்கா 
பூங்கா வருவதில்லை நடைபழக
பாவம் அவளின் (பெண்) சுதந்திரம் 
மொட்டை மாடிக்குள் முடியும்

பாதை ஓரம் பூத்த பூக்கள் பேசிக்கொள்கிறது(கேள்வி)
கிருமிநாசினி பயன்படுத்தாமல் -ஏன்
நம்மை தொடுகிறார்கள் என்று

கடலூர் ராஜ்குமார்

அரிதாரம்

 போலியான புன்னகையும் இல்லை வலிக்காத  அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத  தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...