நடைப்பயிற்சி
நேத்து சாயங்காலம்
சாப்பிட்ட பானிப்பூரியால்
விடியற்காலையில்
பாதயாத்திரை (பரிகாரம்) நடக்கும்
நெடுந்தூரம் நடந்தாலும்
வேர்வை வர திணறுகிறது
அவள் புன்னகையும் வெட்கமும்
அப்படித்தான் எப்போதும் திணறும்
பக்கத்துவீட்டு அக்கா
பூங்கா வருவதில்லை நடைபழக
பாவம் அவளின் (பெண்) சுதந்திரம்
மொட்டை மாடிக்குள் முடியும்
பாதை ஓரம் பூத்த பூக்கள் பேசிக்கொள்கிறது(கேள்வி)
கிருமிநாசினி பயன்படுத்தாமல் -ஏன்
நம்மை தொடுகிறார்கள் என்று
No comments:
Post a Comment