Thursday, 29 August 2024

நெஞ்சில் மாமழை

இளம் வெயில்

உண்ண தழுவ 

காத்திருந்த 

வேளையில்


அதிகாலையில் 

மெல்லிய குளிர்காற்றில்

உனது சேலையில் 

அசைந்து ஆடியது


கோடையின் வெக்கை

தணிக்க "மழை" யை

அனுப்பி வைத்தாய்


உனக்கும் எனக்கும்

இடைவெளியில் 

வடகிழக்கு பருவமழை 

கொட்டி தீர்த்து


உனது பெயரை 

நினைத்துக் கொண்ட

கோடை மழையில்

நனைந்து நின்றேன்.


 




நான் கிராமத்து பொண்ணு

 நீ சில நேரங்களில் பயன்படுத்தும்

 "நான் கிராமத்து பொண்ணு" என்ற சொற்களில் எவ்வளவு திமிரும், அன்பும், பேரழகு உள்ளது என்பதை 

இப்பொழுது உணர தொடங்கி இருக்கிறேன்.



Wednesday, 15 December 2021

பெருங்கனவுகள்

பனிதுளியின் உறக்கத்தை
கலைக்க மாலைநேர நிலவு
நெடுஞ் சாலையில் நடந்து வருகிறது 
நீண்ட நாட்களுக்கு பிறகு

குளிரை பிரிந்த இரவும் 
கூட்டை பிரிந்த பறவையும் 
ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறது
பார்வையால் மௌனங்களை 
மட்டுமே பரிமாறிக் கொள்கிறது

முதல் மழையில் நனைந்த பூக்கள்
தனது காதல் தேனீயிடம்
நலம் விசாரிக்க முடியாமல் 
போகாத ஊருக்கு போக 
வழி கேட்டு நிற்கிறது

வேற்றுகிரகத்தில் குடியேறிய
மஞ்சள் இளம் வெயிலுக்கு
ஒரு குவளைத் தேனீரை நிழலுடன் 
அருகே அமர்ந்து பருக ஆசை

என் பிரபஞ்சத்தின் இன்னும் சில 
ஆசைகள் பெருங்கனவுகளாகவே
இருக்கிறது கடைசியாக கேட்க
நிறைவேறாத நெற்றிமுத்தங்கள்போல

கடலூர் ராஜ்குமார்


Wednesday, 25 August 2021

நிழல் காதல்

நிழல் காதல்

நீள் சாய்விருக்கையில் - அவளின்
நீண்ட காத்திருப்பு நீள்கிறது
நிழல் காதலனின் வருகைக்கு 

இருக்கை ஒன்று தான் - இங்கே
இடமாறிவிட்டது இரு இதயங்கள்
இரண்டாம் உலகப்போரின் யுத்தத்தை விட
இவளின் இதயதுடிப்பு சத்தங்கள் அதிகம்

வாரநாட்களில் அவளை பார்ப்பது - வரமே
வாசம் வீசிப்போன வசந்தகாலம் அது
வானவில் பச்சை நிற சுடிதார் - அவளுடன்
வாழ்ந்து விட்டு போக சொல்கிறது

அளவு சற்றே மாறிய  ஆடை - ஓன்று
அது போதும் என்னை அழகாக மாற்ற
அழைத்த திரையில் தீர்ந்து மணித்துளிகள்
அடுத்து எப்போ தூங்காத இமைகளை காண

வரிகள் :கடலூர் ராஜ்குமார்

Monday, 23 August 2021

நறுவீ

நறுவீ..!.

சிறுஇதழ் புன்னகையால்
சிறையில் வாடுகிறேன்..!
சின்ன முத்தால் மீட்க
சீக்கிரம் வந்துவிடு...!

உருவம் இல்லாமலே 
ஊடுருவ செய்கிறாய்...!
ஊதா நிறத்தாலே 
உயிரை கரைக்கிறாய்...!

என்னை அறியாமலே
ஏங்க வைக்கிறாய்...!
ஏழு ராகங்களை
என்மேல் வாசிக்கிறாய்...!

நீண்ட கூந்தலில்
நீந்தாம தவிக்கிறேன்...!
நித்தம் ஒரு முறை
நெஞ்சோரம் சாய்ந்துவிடு...!

--கடலூர் ராஜ்குமார்

Sunday, 22 August 2021

எனக்கும் சிறகுகள் முளைக்குதே

எனக்கும் சிறகுகள் முளைக்குதே
-------------------------------------------------
உன் நினைவை
சுமக்கும் ஆகாயத்தை
கடக்கும் போது 
சிறகாய் பறக்கிறேன்..!!

உன் கண்ணுக்குழி
தீண்டிய மேகத்தால் 
கனவு படுக்கையில்
மழையாய் வீழ்கிறேன்..!!

       ~ கடலூர் ராஜ்குமார்

Saturday, 21 August 2021

நடைப்பயிற்சி ஹைக்கூ

நடைப்பயிற்சி

நேத்து சாயங்காலம்
சாப்பிட்ட பானிப்பூரியால் 
விடியற்காலையில்
பாதயாத்திரை (பரிகாரம்) நடக்கும்

நெடுந்தூரம் நடந்தாலும் 
வேர்வை வர திணறுகிறது 
அவள் புன்னகையும் வெட்கமும் 
அப்படித்தான் எப்போதும் திணறும்

பக்கத்துவீட்டு அக்கா 
பூங்கா வருவதில்லை நடைபழக
பாவம் அவளின் (பெண்) சுதந்திரம் 
மொட்டை மாடிக்குள் முடியும்

பாதை ஓரம் பூத்த பூக்கள் பேசிக்கொள்கிறது(கேள்வி)
கிருமிநாசினி பயன்படுத்தாமல் -ஏன்
நம்மை தொடுகிறார்கள் என்று

கடலூர் ராஜ்குமார்

அரிதாரம்

 போலியான புன்னகையும் இல்லை வலிக்காத  அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத  தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...